வெ.இ., தெ.ஆ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்

 

துபாய்: இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கு பின், வளைகுடா நாடுகளில் போர் வெடித்ததால், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா வீரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வெ.இ. வீரர்களில் ஒரு பகுதியினர் கடந்த வாரம் விமானத்தில் சொந்த நாடு சென்றனர்.

இந்நிலையில் மீதமுள்ள இரு நாடுகளின் வீரர்களும், விமானங்கள் மூலம் தங்கள் நாடுக்கு நேற்று திரும்பிச் சென்றதாக ஐசிசி அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, போட்டிகள் முடிந்த பின்னர், வீரர்கள் அவர்களின் நாடுகளுக்கு செல்ல தக்க ஏற்பாடுகளை ஐசிசி உடனடியாக செய்யாததற்கு, தென் ஆப்ரிக்கா வீரர் குவின்டன் டிகாக், டேவிட் மில்லர், வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் ஸமி வருத்தம் தெரிவித்தனர்.

Related Stories: