தஞ்சை : ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க தஞ்சை நெட்டிவேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஓரிடத்தில் தயாரிக்கக் கூடிய பொருட்கள் மற்றும் அதன் பெருமையை விளக்கும் விதமாக அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த பொருளை அந்த இடத்தில் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதோடு அதற்கான அங்கீகாரமும் உலக அளவில் சென்றடையும். இதுவரை தமிழகத்தில் தஞ்சை கலைத்தட்டுகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, காஞ்சிபுரப் பட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை உள்ளிட்ட பாரம்பரிய பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது.