மதுரை: வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மொத்தம் 15 நாட்களில் வைகை அணையில் இருந்து 1500 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்