திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் பெட்டிக்கடையில் இருந்த 15 வயது சிறுமி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். முன்னதாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சிறுமி ஜெயஸ்ரீ அளித்த மரண வாக்குமூலம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதில், “அந்த கவுன்சிலர் முருகையனும், அந்த யாசகனும் எரிச்சிட்டாங்க... பெட்ரோலால ஊத்தி எரிச்சிட்டாங்க... எங்க அப்பா எங்கே?” எனக்கூறி ஜெயஸ்ரீ அழும் குரல் கேட்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் நெஞ்சம் பதறி கண்ணீர் விட்டனர்.