பெட்ரோலால எரிச்சிட்டாங்க... எங்க அப்பா எங்க...நெஞ்சை பதற வைக்கும் சிறுமி ஜெயஸ்ரீயின் மரண வாக்குமூலம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் பெட்டிக்கடையில் இருந்த 15 வயது சிறுமி ஜெயஸ்ரீ பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். முன்னதாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சிறுமி ஜெயஸ்ரீ  அளித்த மரண வாக்குமூலம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அதில், “அந்த கவுன்சிலர் முருகையனும், அந்த யாசகனும் எரிச்சிட்டாங்க... பெட்ரோலால ஊத்தி எரிச்சிட்டாங்க... எங்க அப்பா எங்கே?” எனக்கூறி ஜெயஸ்ரீ  அழும் குரல் கேட்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் நெஞ்சம் பதறி கண்ணீர் விட்டனர்.

இளைஞர்கள் திடீர் தர்ணா: சிறுமி ஜெயஸ்ரீயின் உடல் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுமதுரை கிராமத்தில் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. அப்போது கிராம இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, சிறுமியின் உடலை அடக்கம் செய்வற்கு முன்பு குற்றவாளிகளின் குடும்பத்தை ஊரைவிட்டு விரட்ட வேண்டும். தகராறு தொடர்பாக 7 ஆண்டுகளாக ஊர் முக்கியஸ்தர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்று நடத்திருக்காது என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தபின், சிறுமியின் உடலை அடக்கம் செய்ய வழிவிட்டனர்.

Related Stories: