ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது ஏமாற்றுவேலை: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓய்வு காலப் பலன்களை வழங்காமல் ஒத்திப் போடுவதற்காகவே ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வேண்டிப் பதிவு செய்துகொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அரசு என்ன வழி சொல்லப்போகிறது? எனவே, ஓய்வுபெறும் வயதை ஓராண்டுக்கு  உயர்த்தியுள்ள நாடகத்தை கைவிட்டு, பறிக்கப்பபட்ட உரிமைகளை மீண்டும் அரசு ஊழியர்களிடம் ஒப்படைப்பதற்கும்  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: