கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிப்பால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், அதன் ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது சரக்கு விமானங்களும், சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு நடப்பு நிதியாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என கிரடிட் ரேட்டிங் மற்றும் ஆய்வு நிறுவனமான CRISIL தெரிவித்துள்ளது.