கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் சலூன் கடைகளுக்கு சென்று முடிவெட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட மருத்துவர் சவரத் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் கோவை சேரன் மாநகர், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 40 சலூன் கடைகளுக்கு முழு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.