மரக்காணம்: விண்ணில் இருந்து எரிந்தபடியே கடலில் விழுந்த மர்ம பொருளால் மரக்காணம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்டது எக்கியர்குப்பம் மீனவ பகுதி. நேற்று முன்தினம் இரவு அப்பகுதி மீனவர்கள் கடற்கரையோரம் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது விண்ணில் இருந்து ஒரு மர்ம பொருள் கண்ணை பிரகாசிக்கும் வகையில் அதிக வெளிச்சத்துடன் எரிந்து கொண்டே கடலை நோக்கி வந்துள்ளது. இந்த அதிசய காட்சியை கண்ட மீனவ பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்று திரண்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.