நாகர்கோவில்: பிறந்ததும் உடல் நீல நிறமாக மாறியதால் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை ஆம்புலன்சில் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக மாநில எல்லைகள் திறக்கப்பட்டது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி பிரசவம் நடந்தது. குழந்தை பிறந்ததும் அதன் உடல் முழுவதும் நீல நிறமாக மாறியது. எனவே, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆப்ரேஷனுக்கு டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் ஊரடங்கு வேளை என்பதால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்வதும் பெரும் சவாலாக இருந்தது. இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், கேரள முதல்வரை தொடர்பு கொண்டு பேசியது.