தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால், இது தற்காலிகம்தான் என சீன மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார். இது குறித்து ஷாங்காயில் உள்ள கொரோனா நோய் தொற்று பிரிவுத் தலைமை மருத்துவர் ஜாங் வென்கோங் கூறுகையில், ``இதற்கு மேல் சீனா எந்த முடக்கத்தையும் செயல்படுத்தாது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்று நாளிதழில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்துவது, அமல்படுத்துவதன் மூலம் ஒரு நோய் தொற்றை நீண்ட காலத்துக்கு கட்டுக்குள் மட்டுமே வைத்திருக்க முடியும்.