நாகை: உலக மக்கள் கொரோனா நோயில் இருந்து விடுபட நாகையில் மகா மிருத்யுஞ்ச ஹோமம் நேற்று நடந்தது.கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்கள் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி நாகையில் மகா மிருத்யுஞ்ச ஹோமம் நடந்தது. இதை தொடர்ந்து உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி தன்வந்திரி ஹோமம் நடந்தது.