சென்னை: ஜனநாயக நாட்டில் யாரும் எவருக்கும் உதவி செய்யலாம். உதவி செய்யக் கூடாது என்பது சர்வாதிகாரத்தனம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் செய்தித் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் துன்ப துயரத்தை அனுபவித்து வரும் ஏழை- எளிய மக்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்குவது தவறு என்றும், மீறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு போட்டுள்ளதாக அந்தச் செய்திக்குறிப்பு கூறுகிறது. இத்தகைய உத்தரவு போட்ட ஈவு இரக்கமற்ற அந்த உள்ளத்தை கேட்கிறேன்; தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக் கூடாது, செய்ய முன்வந்தால் தடுப்பேன் என்பது தான், இந்த ஆட்சியின் வஞ்சக எண்ணமா?.