வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் : கொரோனா நுழையாத அரியலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் பொது மக்கள் 2 நாட்கள் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 3 நிற வண்ண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை. இதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக உள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா, புதிய நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்து அதிரடி காட்டியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 22,760 குடும்பங்களுக்கு தனிப்பட்ட அடையாள அட்டையை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து வீடுகளுக்கும் பச்சை, நீலம் மற்றும் மங்கள் நிற அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது .ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவர் இந்த அடையாள அட்டையை கொண்டு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்லலாம்.

*பச்சை நிற அடையாள அட்டை திங்கள் மற்றும் வியாழக்கிழமை,

*நீல நிற செவ்வாய் மற்றும் வெள்ளி,

*மஞ்சள் நிற அடையாள அட்டை புதன் மற்றும் சனி

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் ரத்னா, அரியலூர் மாவட்டத்தி 201 பஞ்சாயத்து உள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.இந்த நடைமுறையை காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் வருவது வாடிக்கையாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் மருந்து, மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வீட்டிற்கே வரும் நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார்.

Related Stories: