சென்னை: ஒரு வென்டிலேட்டரில் 4 பேர் சுவாசிக்கும் வசதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 200 சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் 100 வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையிலே கிருமியின் தொற்று ஏற்பட கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால், மருத்துவமனைகளில், டீன் தலைமையிலான மருத்துவர்கள் வழிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனர். உடை மாற்றக்கூடிய இடம், முகக்கவசம், உடல் கவசம் உள்ளிட்டவையை நோயாளிகள் பார்த்துவிட்டு வந்த பிறகு எப்படி அப்புறப்படுத்துவது என்பதையெல்லாம் சரியாக பின்பற்றுகின்றனர். இது பாராட்டதக்கது. இதை தான் நாங்கள் இன்று ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்.