புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் 21 நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் தங்களின் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்கள் மூலம் ‘ரிமோட்டில்’ பணியாற்றி வருகின்றனர். இதுபோல், நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.இதை கம்ப்யூட்டர் கிரிமினல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சைபர் தாக்குதல் நடத்தி கம்பெனியின் முக்கிய தகவல்களை திருடுகின்றனர். இதை தடுப்பதற்காக, கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழு (சிஇஆர்டி) வழங்கியுள்ள ஆலோசனைகள் வருமாறு: