சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் 90,000 பஞ்சாபிகள் இந்த மாதம் சொந்த ஊர் திரும்பினர்.இவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் பல ஆயிரம் பேருக்கு கோரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு அச்சமூட்டும் வகையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.