சென்னை: கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இலவச உணவு, நிதியுதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஏற்கனவே இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் கூடுதல் அளவு அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், முதற்கட்டமாக 3000 ரூபாயும், வாழ்வாதார இழப்பு ஏப்ரலிலும் நீடித்தால் வாரத்திற்கு ரூ.3,000 வீதமும் நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.அதுமட்டுமின்றி, அமைப்பு சார்ந்த பணியாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் அவர்களின் கடன்களுக்கான மாதத்தவணைகளை அடுத்த சில மாதங்களுக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா தாக்கம் எதிரொலி: வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு இலவச உணவு, நிதியுதவி: ராமதாஸ் வலியுறுத்தல்
- கொரோனா தாக்கம் எதிரொலி
- வாழ்நாள் முழுவதும் வாழும் மக்களுக்கு இலவச உணவு மற்றும் நிதியுதவி: ரமழாஸ்
- இழந்த மக்கள்
- ஸ்பான்சர்ஷிப்
- ராமதாஸ்