சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிப்பு

மும்பை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் அமலாக்கத்துறை முன்றாவது முறையாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுப்பட்டதாகெ 8-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அதிகளவு கடன் வழங்கியதாக ராணா கபூர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் முடிந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கு நீண்ட கால ஆஸ்துமா, மன அழுத்த பிரச்சனை இருப்பதாக ராணா கபூர் தெரிவித்தார். இருப்பினும் அவரது காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். டிஎச்எப்எல் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 13ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுப் போலியான 79 நிறுவனங்களுக்கு அந்தப் பணத்தைக் கடன் கொடுத்ததாகக் கூறி மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: