அண்ணாநகர்: சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த மாற்றுத் திறனாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் தொடர்புகொண்ட மர்ம நபர், விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால், மேற்கண்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபணர்களுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதனால், கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலைய வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. தீவிர சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.