பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே ஏனாதிபிடாரம்பட்டியில் வைக்கோல் போரில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி பிடாரம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி. விவசாயி. இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் மாட்டிற்கு வைக்கோல் அள்ளியபோது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது.