கோவை: கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து கோவை அரசு மருத்துவமனையில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் தற்காப்பு மற்றும் ஆரம்ப நிலை கண்டறிதல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மேலும் கொரானா நோய் பரவாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது. பேரணியை, அரசு மருத்துமனை டீன் அசோகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் பழனியம்மாள் தலைமையில் சிறுநீரகத்தை காப்போம், சிறுநீரக நோயை முன்கூட்டிேய கண்டறிவோம் உள்ளிட்ட சிறுநீரக நோய் சம்பந்தமான விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.