இந்தியாவில் கொரோனாவிற்கு முதல் பலி : கர்நாடகாவின் கலபுர்கியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

பெங்களூரு : கர்நாடகாவின் கலபுர்கியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முகமது உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய 76 வயது முதியவர் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து உள்ளார். இந்தியா முழுவதும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 4 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: