சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி அணியின் முன்னணி கால்பந்து வீரரான ஆந்த்ரே ஷெம்ப்ரி (33), நடப்பு சீசன் பைனலுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.லீக் சுற்றின் தொடக்கத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறிய சென்னையின் எப்சி அணி, பின்னர் சிறப்பாக விளையாடி அரை இறுதிக்கு தகுதி பெற்றதுடன் பைனலுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மார்ச் 14ம் தேதி கோவாவில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.