குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பு இருப்பது உண்மை: ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

சென்னை: திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள் விழா மற்றும் சேவா தளம் சார்பில் நடந்த பாதை யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது: நாட்டில் அமைதி கிடையாது, பாஜகவின் ஆட்சியால் டெல்லி, காஷ்மீரில் மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஜெயலலிதா காலிலும், சசிகலா காலிலும் விழுந்து கிடந்த தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தற்போது மோடி மற்றும் அமீத்ஷா காலிலும் விழுந்து கிடக்கின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இருப்பது உண்மை, வருங்காலத்தில் இந்தி பேசாதவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது என்ற சட்டத்தையும் மோடி அரசுகொண்டு வரக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

Related Stories: