தென்காசி: சென்னை அண்ணா மேம்பாலம் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் சரணடைந்திருக்கக்கூடிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். சென்னை தேனாம்பேட்டையில் காவல் நிலையத்திற்கு அருகில் வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தாக்குதல் நடத்துவோரையும், தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் தீவிரமாக தேடி வந்தார்கள். இந்த நிலையில் தான் நேற்று மதுரை நீதிமன்றத்தில் அம்ருதீன், ராஜசேகர், ஜான் உள்ளிட்ட 4 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். இதேபோன்று தென்காசியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸ், ஹரீஷ், தமிழ்ச்செல்வன் என்கின்ற மேலும் 3 பேர் சரணடைந்திருக்கின்றனர். இந்த மூன்று பேரும் தண்டையார்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதில் முக்கியமான தொடர்பு இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் அதற்கான மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.