கீழடி : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் எச்சங்கள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்துள்ள நிலையில், தற்போது 6ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மேலும், இங்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்கள் பயன்படுத்திய பலவகைப் பொருள்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை ரூ.12 கோடி மதிப்பீட்டில் காட்சிப்படுத்தி வைக்க அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.இதற்காக, தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.