தோழி வீட்டில் நகை திருடிய பெண் கைது

புழல்: புழல் அடுத்த வினாயபுரத்தில் தோழி வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். புழல் அடுத்த வினாயபுரம், துளசி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சரண்யா (29). புத்தாகரம், ரேவதி நகர், 1வது தெருவை சேர்ந்தவர் சங்கீதா (29). இருவரும் நெருங்கிய தோழிகள். இதனால் சங்கீதா அடிக்கடி சரண்யா வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 28ம் தேதி அருள்ராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு மறுநாள் வீட்டுக்கு வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 சவரன் நகை, 20 ஆயிரம் திருடு போனது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருள்ராஜ் கொடுத்த புகாரின்படி, புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின்பேரில், சங்கீதாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதினர். இதில், வழக்கமாக சாவி வைக்கும் இடத்தை தெரிந்து கொண்டு வீட்டை திறந்து பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: