ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 299 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆதம்பாக்கம் நெருப்பு மேடை பகுதியை சேர்ந்தவர் காணிக்கைராஜ் (21). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் முன் ஆஜராகி, ‘‘நான் இனிமேல் எந்த குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடமாட்டேன்’’ என நன்னடத்தை பதிவேட்டில் எழுதி கொடுத்து வந்துள்ளார்.