டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் புதிய கார் தயாரிப்புகளுக்கான முதலீடுகளை குறைக்கும் நோக்கில், இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் கிளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி ரக கார் விரைவில் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நிலையில், மூன்றாவது கார் மாடலாக மாருதி எர்டிகா கார் டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்து அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாருதி எர்டிகா கார் டொயோட்டா பிராண்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த கார், இந்தோனேஷியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், டொயோட்டா நிறுவனம் இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.