பிரயாக்ராஜ்: புதிய இந்தியாவை உருவாக்க மாற்று திறனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் பிரயாக்ராஜில் மாற்று திறனாளிகளுக்கு நலஉதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தொழில், சேவை, விளையாட்டு என எத்துறையிலும் மாற்றுத் திறனாளிகளின் திறமைகள் ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்தார்.