தமிழகம் காரிமங்கலம், பாலக்கோட்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல் Feb 28, 2020 கரைமங்கலத்தில் குடிநீர் பற்றாக்குறை Palakkot தர்மபுரி: காரிமங்கலம், பாலக்கோட்டில் ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையை உடனே போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை செய்த தின பணியாளர்கள், கடந்த 4 மாதங்களாக தின சம்பளம் கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனர். எனவே தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உடனே தின சம்பளம் வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காரிமங்கலம், பாலக்கோடு வட்டத்தில் கடும் பற்றாக்குறையை உடனே போக்க வேண்டும். கடந்த 3 வருடங்களாக, தர்மபுரி மாவட்டத்தில் வறட்சின் காரணமாக தென்னை உள்ளிட்ட பல் வகை மரங்கள் முழுமையாக காய்ந்துவிட்டன. இதற்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. எனவே காய்ந்த தென்னை மரங்களுக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் பிரதாபன், சங்க மாவட்ட துணை தலைவர்கள் ராஜகோபால், முருகேசன், துணை செயலாலர் பச்சாகவுண்டர், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாதையன், சாரதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் தொகுதி காங். வேட்பாளரை தகுதி நீக்க கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கியதாக போராட்டம் ஓட்டு இல்லையாம்… ஆனா விரல்ல மை இருக்கு… கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் காமெடி கலாட்டா
வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து குவிப்பு அதிமுக மாஜி அமைச்சர், மனைவியை விடுவிக்க லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு: விசாரணை ஜூன் 12ம் தேதி ஒத்திவைப்பு
வெப்ப அலை வீசும் என வானிலை எச்சரிக்கை தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்: குழந்தைகள், பள்ளி மாணவர்களை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும்
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை
மண் வளத்துக்கும், நீர் வளத்துக்கும் ஆபத்து… அரியமான் கடற்கரைப் பகுதியில் குவியும் பாலித்தீன் குப்பைகள்: அசுத்தமாகும் அழகிய சுற்றுலாத் தலம்
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
குமரியில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் கோடை மழையால் புத்துயிர் பெற்ற திற்பரப்பு அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க 40 இடங்களில் தண்ணீர்: வனத்துறை ஏற்பாடு
சூலத்தேவருடன் தேரில் எழுந்தருளினார் அம்மன்; உடுமலையில் நடைபெற்று வரும் தேரோட்டத்தை காண குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் விதிகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு