கோடா: ராஜஸ்தானில் தனியார் பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம், கோடாவில் இருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சவாய் மதோபோர் நோக்கி சென்றது. பாப்டி கிராமம் அருகே பாலத்தின் மீது பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. பாலத்தின் ஓரத்தில் தடுப்பு சுவர்கள் ஏதும் இல்லாத நிலையில் பேருந்து மெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் உடனடியாக விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.