டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட வன்முறைக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சேதங்களும் அதிர்ச்சி அளிப்பதாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று பலமுறை எச்சரித்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கையை மத்திய அரசு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: