தாம்பரம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் என்பிஆர் தொடங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தாம்பரத்தில் கண்டன கூட்டம் நடந்தது. இதில், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு, கிறிஸ்தவ, இந்து சமய பிரமுகர்கள், ஜமாத் தலைவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் ஜவாஹிருல்லா பேசியதாவது: அதிமுக சார்பில் பிரதமர் மோடிக்கு தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் சில கேள்விகளை மாற்றும்படி கடிதம் எழுதியிருப்பதாகவும் என்சிஆர் அசாம் போன்ற மாநிலத்திற்கு மட்டும்தான் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.