சென்னை: திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் தொடங்கியுள்ளது. திமுக உட்கட்சி தேர்தல் இன்று தொடங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. 5 மாதங்களுக்கு மேலாக இந்த தேர்தலானது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு என ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் படிப்படியாக இந்த தேர்தலானது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும். இதற்கு பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.