புதுடெல்லி : பல மாதமாக நிரப்பப்படாமல் இருந்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆணையராக (சிவிசி) ஜனாதிபதியின் செயலாளர் சஞ்சய் கோத்தாரியையும், தலைமை தகவல் ஆணையராக பிமல் ஜூல்காவையும் பிரதமர் தலைமையிலான குழு பெரும்பான்மை முடிவு அடிப்படையில் தேர்வு செய்துள்ளது. நாட்டின் முக்கிய அமைப்பின் தலைவர்களை பிரதமர் மோடி தலைமையிலான 3 பேர் குழு தேர்வு செய்கிறது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர், ஊழல் கண்காணிப்பு ஆணையர், தலைமை தகவல் ஆணையர், தகவல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க பிரதமர் தலைமையிலான 3 பேர் குழு நேற்று கூடியது.
காங்கிரசின் கடும் எதிர்ப்பை ஓரம் கட்டி மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆணையர் நியமனம் : பிரதமர், அமித்ஷா அதிரடி
- ஆணையாளர்
- மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு: பணியாளர்கள் எதிர்ப்பு
- மத்திய ஊழல் கண்காணிப்பு
- காங்கிரஸ் நியமனங்கள் ஆணையம்
- அமித் ஷா