சென்னை: சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய தங்கை திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்துள்ளார். இதனால் மீனா தனது தங்கையின் இரண்டு பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து வளர்த்து வந்துள்ளார். இதில் மூத்த மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். மற்றொரு சிறுமி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு சிறுமி வீட்டில் சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து மீனா சிறுமியிடம் கேட்டபோது தன்னை பக்கத்து வீட்டில் வசித்து வரும் லக்ஷ்மணன் என்கிற வாலிபர் பலாத்காரம் செய்ததாக கூறி, அழுதுள்ளார்.