அயோத்தி: ‘பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள முஸ்லிம்களின் கல்லறை மீதா ராமர் கோயிலை கட்டப் போகிறீர்கள்?’ என ராமர் கோயில் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என கடந்த நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும், ராமர் கோயிலை கட்டுவதற்காக 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் உத்தரவிட்டது. அதன்படி, கோயில் கட்டுவதற்காக கடந்த 4ம் தேதி 15 உறுப்பினர்களை கொண்ட ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் பிரதமர் மோடி அறக்கட்டளை அமைத்துள்ளார். இந்நிலையில், இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 1885ம் ஆண்டு அயோத்தியில் நடந்த வன்முறையின்போது 75 முஸ்லிம்கள் உயிரிழந்தனர்.