கிரேட்டர் நொய்டா: கால்நடைகளை திருடி வந்தவர் மீது போலீசார் சுட்டததில் காயம் அடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கால்நடை திருட்டில் பல கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. மாமிசத்துக்காகவும், விற்று பணம் சம்பாதிக்காவும் இரவு நேரங்களில் இந்த கும்பல் கிராமம் கிராமமாக வாகனத்தில் சென்று பசு, எருமை, காளை, ஆடுகளை திருடி வருகின்றன. இது தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில் கடந்த நேற்று அதிகாலை ஜார்ச்சா பகுதியில் சாலையில் வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீசார் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் மாடு திருடும் கும்பலைச் சேர்ந்த இருவர் மீது குண்டுகள் பாய்ந்தது. இருவர் தப்பியோடினர். காயம் அடைந்தவர்களை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.