திருவொற்றியூர்: திருவொற்றியூர், எஸ்.பி.கோயில் தெருவை சேர்ந்தவர் விஷால்குமார் (23). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டருகே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து தாகாத வார்த்தையால் பேசி, தகராறு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென விஷால்குமாரின் வயிற்றில் குத்தினார். இதையடுத்து, அனைவரும் தப்பி ஓடினர்.