புதுடெல்லி: உட்புறம் முழுவதும் ராமாயண கதைகள், ராம பஜனையுடன் ‘ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில், அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ரயில்வேயின் ஆண்டறிக்கை அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது. இதில், ‘ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயிலை அறிமுகம் செய்வது தொடர்பாக குறிப்பிடப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ராமாயணா எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் வரும் மார்ச் 10ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயிலின் உட்புறம் முழுவதும் ராமாயண கதைகளின் கதாபாத்திர காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதோடு, ராம பஜனைகள் பயணம் முழுக்க ஒலிபரப்பு செய்யப்படும். ஹோலி பண்டிகைக்குப் பிறகு இதன் சேவை தொடங்கப்படும்,’’ என்றார்.