புதுடெல்லி: ‘‘இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும்,’’ என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறி உள்ளார். ‘அரசு வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதில் முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது. இடஒதுக்கீடு ஒன்றும் அடிப்படை உரிமையல்ல,’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.