பாடாலூர் அருகே 2 ஏக்கரில் சாகுபடி செய்த சோளப்பயிர் எரிந்து நாசம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் துறையூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோள பயிருக்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது யாரேனும் புகை பிடித்து விட்டு தூக்கி வீசி எறிந்ததால் தீ பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.