பாடாலூர் அருகே 2 ஏக்கரில் சாகுபடி செய்த சோளப்பயிர் எரிந்து நாசம்

பாடாலூர்: பாடாலூர் அருகே 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தீவன சோளப்பயிர் எரிந்து சேதமடைந்தது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே உள்ள நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் முத்துசாமி, அடைக்கன் மனைவி ராஜம்மாள்.

இவர்கள் தன்னுடைய மானாவாரி நிலங்களில் மாடுகளின் தீவனத்துக்காக சோளம் விதைத்து இருந்தனர். அந்த நிலத்தில் சோள பயிர்கள் வளர்ந்து அறுவடை நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்த சோள பயிர்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துறையூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோள பயிருக்கு யாராவது தீ வைத்தார்களா அல்லது யாரேனும் புகை பிடித்து விட்டு தூக்கி வீசி எறிந்ததால் தீ பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: