பெங்களூரு: கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி, கன்னட அமைப்புகள் மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மாநில அரசால் அமைக்கப்பட்ட டாக்டர் சரோஜினி மஹிஷி தலைமையிலான ஆணையம் கடந்த 1986ம் ஆண்டு சிபாரிசு செய்திருந்தது. கடந்த 34 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த அறிக்கையை மாநில அரசு இன்னும் செயல்படுத்தாமல் உள்ளது. இந்த அறிக்கையை செயல்படுத்தக்கோரி கன்னட கூட்டமைப்பு சார்பில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த போராட்டம் நடந்தது.