போதை ஸ்டாம்ப் விற்றவர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி அருகே கலையரங்கம் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் கொடைக்கானல் அப்சர்வேட்டரி புதுக்காடு பகுதியை சேர்ந்த சதிஷ் என்ற நாகராஜ் பான்ஸ் (30) என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, எல்எஸ்டி என்ற போதை ஸ்டாம்ப் 3ஐ பறிமுதல் செய்து போலீசார் சதீஷை கைது செய்தனர்.

Related Stories: