மயிலாடுதுறை அருகே காரில் கடத்திய 800 லிட்டர் சாராயம் பறிமுதல்

*தப்பியோடிய டிரைவருக்கு வலை

குத்தாலம் : மயிலாடுதுறை அருகே காரில் கடத்திய 800 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் பெரம்பூர் இன்ஸ்பெக்டர் நாகவல்லி தலைமையிலான போலீசார் வழுவூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வழுவூர் ரயில்வே கேட் அருகே வந்த காரை நிறுத்தினர். அப்போது காரை ஓட்டி வந்த நபர், போலீசாரை கண்டதும் காரை அதே இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனையடுத்து போலீசார், அந்த காரை சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக 800 லிட்டர் சாராயம் இருந்ததும், காரைக்காலில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராயம் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

The post மயிலாடுதுறை அருகே காரில் கடத்திய 800 லிட்டர் சாராயம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: