புதுச்சேரி: ஏனாம் சென்ற கவர்னர் கிரண்பேடிக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் கையில் கருப்பு பலூன்களை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை மாநிலம் ஏனாம் தொகுதியில் வளர்ச்சி பணிகளை தடுக்கும் கிரண்பேடி தன்னுடைய தொகுதிக்கு வரக்கூடாது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இருப்பினும் கவர்னர் நேற்று காலை ஏனாம் சென்றார். அங்கு சென்ற கிரண்பேடிக்கு பொதுமக்கள் கருப்பு பலூன்களை கையில் பிடித்தபடி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் செல்லும் வழி நெடுகிலும் கருப்பு கொடியுடனும், கோரிக்கை அட்டைகளை பிடித்தபடி முற்றுகையிட நின்றவர்களை போலீசார் தடுத்தனர்.