புதுடெல்லி: ‘பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 கோடி விவசாயிகள் 3வது தவணையை பெறவில்லை,’ என மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் விவசாயிகளுக்கு 3 தவணையாக ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் பயன் பெற்றவர்கள் விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டன. இதற்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது: பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பம் 2018ம் ஆண்டு முதல் நவம்பர் 2019ம் ஆண்டு வரை 9 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7.62 கோடி பேர் அல்லது 84 சதவீதம் விவசாயிகள் முதல் தவணைத் தொகையை பெற்றுள்ளனர்.