ஈரோடு: அந்தியூர் அருகே சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னதங்கம் என்ற ராதாகிருஷ்ணன்(49). அ.தி.மு.க. பிரமுகரான இவர், அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை என்ற இடத்தில் நேற்று காலை காரில் வந்த மர்ம நபர்களால் நடுரோட்டில் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கிடையே, கொலையாளிகள் வந்த காரை கவுந்தப்பாடி போலீசார் சலங்கபாளையம் பகுதியில் துரத்தி சென்று பிடித்தனர். காரில் இருந்த சென்னை, பல்லாவரத்தில் வசித்துவரும் மதுரை மாவட்டம், ஈ.பி. காலனியை சேர்ந்த சரவணன் (25), பல்லாவரத்தை சேர்ந்த மூர்த்தி மகன் பாலமுருகன்(30), ராஜேஷ்(26), மதுரை கரிமேடு, அழகர் வீதியைச் சேர்ந்த சிவா(24), அதே பகுதியை சேர்ந்த முத்துமாரி(25) ஆகியோரை கைது செய்தனர்.