திருவொற்றியூர்: திருவொற்றியூர் சன்னதி தெருவில் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் அமைந்துள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு மாசி மாதமும் தேரோட்டம் நடைபெறும். விழா முடிந்ததும் இந்த தேர் சன்னதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். இந்த தேர் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்தது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் தேரோட்டம் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அறநிலையத்துறை சார்பில் ரூ.45 லட்சம் செலவில் 42 அடி உயரம் கொண்ட புதிய தேர் செய்யப்பட்டு, 2016ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே தேர் நிறுத்தப்பட்டு இருந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதால், புதிய தேர் நிறுத்துவதற்கு போதிய இடவசதியின்றி, தற்போது கோயிலுக்கு அருகில் குளத்தையொட்டி சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு அருகில் பொது கழிவறையும், ஈமச்சடங்கு கூடமும் இருப்பதால் இது சாஸ்திர முறைப்படி இங்கு தேரை நிறுத்துவது தவறானது என்றும், இதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பக்தர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள நிலத்தை மீட்காததால் ஆகம விதிமீறி சாலையோரம் நிறுத்தப்படும் தேர்: சபாநாயகரிடம் அதிமுகவினர் புகார்
- மறுசீரமைப்பு
- நில
- சாலை
- திருவோட்டியூர் வடவுடைமனா
- திருவோட்டியூர் வடவுடைமனா கோயில் மறுசீரமைப்பு நிலம் இல்லாததால்
- சபாநாயகர்
- அஇஅதிமுக